தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்ட பிறகும் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று காலை முதலே மக்களுக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்வதுதான் தட்டுப்பாடுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்று காலை முதல் பால் பாக்கெட் கிடைக்காததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.