கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளை கொடுத்தனர். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர், அந்தப் பக்கம் உள்ளவர்கள் குண்டர்கள் தான்.
எடப்பாடி பழனிசாமியின் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம். தனி கட்சி தொடங்குவது என் நோக்கமே இல்லை என பேசினார்.