சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு! #Tsunami-யால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, #ClimateChange-இன் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்! என தெரிவித்துள்ளார்.