இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 101 வயது போர்க்குணமிக்கப் போராளியுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் எளிய மக்களுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றிப் போராடிய அவர், ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த அவரது மறைவுச் செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும்…
— TVK Vijay (@TVKVijayHQ) February 25, 2026
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு உருக்கமான முறையில் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஒரு மாபெரும் போராளியை இழந்துவிட்டோம் என்றும், அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் இந்த நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பு என்றும் அவர் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்த ஒரு தூய்மையான அரசியல் சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
