நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ_பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நடைமுறை நல்லிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனை சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி செல்வதற்காக இதுவரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.