கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த சிறுவனின் தாய் தோசை கரண்டியை அடுப்பில் காயவைத்து சிறுவனின் கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார். அதோடு சிறுவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவியும் கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த சம்பவங்களை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்து பஞ்சாயத்தார் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனின் தாயார் பலமுறை சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாயார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.