மகளிருக்கு ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15இல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முன்னதாக இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  செப்டம்பர் 11ஆம் தேதி இறுதிகட்ட ஆலோசனை நடத்துகின்றார். யார் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற பட்டியல் தயாராகி விட்டதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் விண்ணப்பம் அளித்திருந்தவர்களில் சுமார் 5 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இந்த 5 லட்சம் பேருக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்காது.