மக்கள் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் எழுதி ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் செய்தி வெளியானது. அது முழுக்க முழுக்க பொய் என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆனால் கைவிரல் ரேகை சரி பார்க்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற செய்தியும் வதந்தி என்று அரசு தெரிவித்துள்ளது.