இசைஞானி இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன், அதனால் மீண்டும் அவரிடம் போய் நிற்கமாட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ‘டெவில்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “மிகவும் போர் அடிக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க முடிவு செய்தேன்.

இளையராஜா எனக்கு ஒரு குருநாதர். அவர் காலில் விழுந்து வணங்குவேன். ஆனால் மீண்டும் இசையமைக்க சொல்லி அவரிடம் போய் நிற்கமாட்டேன்” என பேசியுள்ளார். விதார்த், மிஷ்கின், பூர்ணா நடிக்கும் ‘டெவில்’ படத்தின் மூலம் மிஷ்கின் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.