வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வரும்  2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்திய இளைஞர்களின் திறனை இந்த உலகமே பார்ந்து வியந்து வருகிறது. மக்களின் சிந்தனையை நாங்கள் மாற்றியுள்ளோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.