கடும் பசி இருக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண வீடுகளில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு சத்தம் இல்லாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி செல்லும்போது பிடிபட்டால் சிலர் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்பவர்கள் மீது புகார் பதிவானால் IPC பிரிவு 441 கிரிமினல் அத்துமீறல் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.