மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை ராஜஸ்தானில் இருந்து அழைத்து வந்து சொந்த ஊரில் வைத்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் மக்கள் அனைவரும் இணைந்து அந்த நபரின் பாதி தலையை மொட்டையடித்து, பாதி மீசையை எடுத்து, அடித்து உதைத்து கொடுமைபடுத்தியுள்ளனர். மேலும் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதனை அந்த நபரை குடிக்கவைத்து அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.