‘பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023’ மூலம் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு பரவி வருகிறது. இலவச லேப்டாப் பெற அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யும்படியும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு PIBFactCheck நடத்திய உண்மை சோதனையில் இந்த தகவல் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது .

இதனையடுத்து PIB வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிவிப்பு போலியானது. இதுபோன்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை என விளக்கியுள்ளது. எனவே இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்.