பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்காத போது புதிய நாடாளுமன்றம் எதற்கு என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ‘மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. நாம் மனிதர்கள்.. இந்தியர்கள்.. பதக்கங்கள் வென்று இந்தியர்களை பெருமைப்படுத்திய மல்யுத்த வீரர்களுக்கு துணை நிற்போம். அவர்களின் குரலை உலகம் கேட்க வைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.