இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மெக்லாண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சவளியான முகன் சிங் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மெரிலோபானுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பர்மிங்கம் மூர் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்திலிருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் ரயிலில் ஏறி முகன் சிங் அருகே அமர்ந்துள்ளார். அப்போது முகன் சிங்க் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் முகன் சிங்கை கைது செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு சமீபத்தில் உறுதியாகி 16 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு பாலியல் குற்றவாளிகள் பெயர் பட்டியலில் முகன்  சிங்கின் பெயரை அடுத்த ஏழு வருடங்களுக்கு சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.