பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு தங்கி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் இரண்டு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடந்ததில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமிருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடிய நிலையில் அவர்களது முகாம் கைப்பற்றப்பட்டு அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்களும் மரணம் அடைந்துள்ளனர்.