இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை படகில் வங்க கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.