தமிழகத்தில் இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.