திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் ஜானகி உயிருடன் இருக்கும் போது சொத்துக்காக அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி பட்டா மாற்றியுள்ளார். விக்னேஷின் தந்தை இறந்த பிறகு ஜானகி காணாமல் போய்விட்டார். இதனால் விக்னேஷ் தனது தாயை தேடி கண்டுபிடிக்காமல் அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி நிலத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

இதனை அறிந்த ஜானகி திரும்ப வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ், விஏஓ ராஜா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விசாரணை செய்யாமல் இறப்பு சான்றிதழ் வழங்கிய விஏஓ ராஜாவை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.