இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில் ஏராளமான மக்கள் பலியாகியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களிடம் ஹமாஸ் பயங்கரவாதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

அதன்படி, இஸ்ரேலிய ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு இறந்த உடல்களை கால்களால் உதைத்தும், முகத்தை மிதித்தும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.