தற்போது இந்தியாவில் வடமாநிலங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்றிரவு 2:16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், அருணாச்சலபிரதேசத்தில் சங்லாங் பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி இந்தியாவின் வடமாநிலங்களில் அதிக நிலநடுக்கம் உணரப்படுவதற்கு காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் என தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் சுமார் 6.5 என்ற அதிகமான ரிக்டரில் அளவில் பதிவாகி உள்ளதால் தான், இதன் தாக்கம் இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் உணரப்படுவதாக தகவல கசிந்துள்ளது.