கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபோது வீட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.