இந்தியாவில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவரும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை மற்றும் நன்கொடை ஆகிய செலவுகள் அனைத்தும் கழிக்கப்பட்டு வருட சம்பளம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயம் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் பல ஊழியர்கள் வருமான வரி செலுத்தக்கூடாது என்பதற்காக போலியான வீட்டு வாடகையை ஒப்படைத்ததாக புகார் எழுந்த நிலையில் தற்போது போலியான ஆவணங்களை கண்டறிய வருமானவரித்துறை புதிய சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாப்ட்வேர் மூலம் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் ஒப்படைத்த போலியான ஆவணங்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான ஆவணங்களை ஒப்படைத்த ஊழியர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் வருமான வரி துறை தெரிவித்துள்ளது.