இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது மார்ச் 29ஆம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உள்ளது. அதிமுகவுக்கு தான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அப்படி சின்ன ஒதுக்காத பட்சத்தில் அதனை இபிஎஸ் அணிக்கு கொடுக்காமல் முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.