அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை தந்தார். அவர் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஜெயந்திர சுவாமிகள் அனுஷ்டானத்தில் நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்ட பிறகு ஸ்ரீ விஜயத்திற விஜயந்திரரை தனது மனைவி அனுராதா, அமமுக நிர்வாகி கரிகாலன் ஆகியோருடன் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க ஓபிஎஸ் சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்றொரு கட்சியின் சின்னத்தில் அவர் போட்டியிட்டால் அது அவருக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார் என்று கூறினார்.