ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். சூளுமையாக இருந்த கோவையில் இரண்டு டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளை காரணம் என குற்றம் சாட்டிய அவர், டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கிக் கொடுப்பவர் இபிஎஸ், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளை அடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது என சாடினார்.