முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை மத்திய வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தயாநிதி மாறன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

அவர் அளித்த பேட்டியில், பாஜகவும் அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. சிறுபான்மை வாக்குகளை பெறவே கூட்டணி இல்லை என்று அதிமுக பொய் கூறுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவர் அடுத்த பிரதமர் ஆவார் என தெரிவித்தார்.