இன்றைய காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் பலரும் நிலையான வருமானத்தை பெறுவதற்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக அளவு இணைகின்றனர். இந்த திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட நிலையில் கணக்கு முடிவடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையை நீங்கள் பெறலாம். இந்த பணத்தை முதிர்வு காலத்திற்குப் பிறகு நீங்கள் அப்படியே வங்கி கணக்குக்கு மாற்றலாம்.

அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படும் நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகும் கணக்கை தொடர நினைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நீங்கள் இணைய விரும்பினால் அருகில் உள்ள அரசு, மற்றும் தபால் நிலையத்திற்கு நேரடியாக சென்று இணையலாம்.