நடிகையும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுமான திவ்யவாணி காங்கிரஸில் இணைந்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து செய்தி தொடர்பாளராக பதவி வகித்த திவ்யவாணி 2022 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியிலிருந்தும் விலகினார். தற்போது ஒரு வருட காலத்திற்குப் பிறகு இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.