தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

குறிப்பாக ஊதா கலர் ரிப்பன் உனக்கு யாரு அப்பன் பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ஸ்ரீதிவ்யா ஆறு ஆண்டு இடைவேளைக்கு பிறகு ரெய்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக கூறிய ஸ்ரீதிவ்யா, தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் சினிமாவில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.