ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஒரு பழுத்த பழமாக, கேங்ஸ்டராக நீங்க இந்த படத்துல நடிக்கிறீங்கனு ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல ஆரம்பிச்சாரு. இப்பவே என்னைய கிழவன் ஆக்கிறாதீங்க சார்னு சொல்லி, கதையே கேட்காம அவரை அனுப்பிவிட்டேன்.

ஒரு நாள் விஷாலை சந்திச்சேன். கதைய கேட்டுட்டு ஓகேனா பண்ணுங்க, இல்லனா விட்டிருங்கனு சொன்னாரு. அன்னைக்கு மட்டும் விஷாலை சந்திக்கலைனா இந்த படத்துல நான் இருந்திருக்கவே மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.