அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும். இதனால் இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளதால் ஓபிஎஸ் இன் அரசியல் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக மூலம் காய் நகற்ற ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தென் மாவட்டங்களில் வெற்றி பெற ஓபிஎஸ் தயவு தேவை. இதனை காரணம் காட்டி மீண்டும் அதிமுகவில் இடம்பெற முயற்சிக்கலாம் என்ற திட்டத்தில் இபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.