அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும். இதனால் இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஓபிஎஸ் பெரிய குளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆலோசனைக்கு பிறகு இன்று மாலைக்குள் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து ஓபிஎஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.