தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார், யாருக்காக வாக்கு சேகரிக்கிறார் என நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எடப்பாடியை  பார்த்து இந்த ஊரே காரி துப்புகிறது, இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது எனவும் கூறியுள்ளார். நாய்க்கு கூட நன்றி இருக்கும். ஆனால் இந்த உலகத்தில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி இருக்கிறார் என்றால் அது பழனிசாமி மட்டும்தான். துரோகங்கள் அரசியலில் நடப்பது சகஜம் தான். ஆனால் எடப்பாடி மாதிரி  துரோகங்களை யாரும் செய்ய முடியாது எனவும் விமர்சித்தார்.