இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக அவர் பதிவிட்ட ஒரு போஸ்ட்க்கு நிறைய பேர் தவறான மற்றும் ஆபாசமான கமெண்ட்களை பதிவு செய்ததால் அவர் தனது கணக்கை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சரியான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கை தேடும்போது வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.