சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியே தனது கடைசி போட்டி என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அம்பத்திராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சார்பாக 14 சீசன் களில் மொத்தம் 204 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 11 பிளே ஆப்கள் மற்றும் எட்டு இறுதி போட்டிகளிலும் விளையாடினார். இவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.