சென்னை அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இது எனது கடைசி போட்டி என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

2023 ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள பேட்டர் அம்பதி ராயுடு இது எனது கடைசி போட்டி என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், 2 சிறந்த அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 முறை கோப்பைகள் வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளேன். இன்று இரவு 6வது. இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த தொடரை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி. நோ யூ டர்ன் என பதிவிட்டுள்ளார்.. ஏற்கனவே சர்வதே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ராயுடு ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.