தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.