ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இதனால் மீன் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.