இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

புதிதாக அமைந்த பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என கூறி இருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு எல்பிஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.