தமிழகத்தில் இன்று டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாகவும், 50 லட்சம் முதல் மூன்று கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவிதத்திலிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.