மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது.

டிசம்பர் 31-ஆம் தேதி இதற்கான கடைசி நாள் என் அறிவிக்கப்பட்டது. ஆனால் பலரும் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பும் புதன்கிழமை வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 28 வது நாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இனியும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.