தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு எடுக்கப்படும். தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள் திருத்தும் போது கருத்தில் கொள்ளப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது.