செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் உயர இருக்கின்றன.  கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. விக்கிரவாண்டி, சமயபுரம், எலியார்பதி உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் கட்டணங்கள் உயர உள்ளன. கார்களுக்கு 45இல் இருந்து 150ஆகவும், பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு 10உம் கட்டணம் உயரவுள்ளது. அதிக சக்கரங்கள் கொண்ட வாகனங்களுக்கு 740 வரை கட்டணம் உயருகிறது.