வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

அதன் பிறகு மறுமார்க்கமாக இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 6ஆம் தேதி காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் துறைமுகம் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய வழியாக வேளாங்கண்ணி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.