பாம்புகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானவை என்ற பொதுவான நம்பிக்கையைப் பொருத்தவரை, அவற்றின் அருகே செல்வதே ஓர் ஆபத்தாகக் கருதப்படுகிறது. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தக் கொள்கையை முற்றிலும் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த காணொளியில், ஒரு அணில், ஒரு ஆபத்தான நாகப்பாம்புடன் நேருக்கு நேர் மோதும் காட்சி பதிவாகியுள்ளது. அதிலும், சிறிய உயிரினமான அணில், அந்த பாம்பின் முன் காட்டும் தைரியமும், புத்திசாலித்தனமும் வியப்புக்குரியதாக உள்ளன.

Instagram தளத்தில் @wildfriends_africa என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோவில், தரையில்  நாகப்பாம்பின் அருகே ஒரு அணில் நெருங்குகிறது. பொதுவாக, பாம்பை கண்டவுடன் அணில்கள் தப்பிக்க முயற்சி செய்யும். ஆனால், இந்த அணில் அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. அணில் மீண்டும் மீண்டும் பாம்பை நோக்கிச் சென்று, அதனை எச்சரிக்கிறதுபோல் நடந்துகொள்கிறது. பாம்பு அதை கடிக்க முயற்சிக்கிறது, ஆனால் அணிலின் சுறுசுறுப்பும், நேர்த்தியும் பாம்பின் முயற்சியைத் தோல்வியடையச் செய்கிறது. சண்டை ஒரு காலப்பகுதி வரை நீடிக்கிறது. இருவரும் சில்லறைப் போரில் ஈடுபடுகிறார்கள், ஆனால் யாரும் எளிதில் விலகத் தயாராக இல்லை.

மேலும் இந்த வீடியோ 20,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் விமர்சனங்களுடன் பாராட்டும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அணிலின் துணிச்சலைப் பாராட்டிய பலரும்,”உண்மையான தைரியம் என்பது உடல்வலிமையால் வருவது அல்ல – நம்மை விட பெரிய எதிரியை எதிர்க்கும் மனதுவலிமையால் வருவது!”
என பலர் க் கருத்து தெரிவித்துள்ளனர்.