மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ. 15  ஆம் தேதி 2022ல் தொடங்கி, டிச.31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின், ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப். 15வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவே இறுதிவாய்ப்பு என மின்துறை அமைச்சர் கூறினார். அதன்படி, 3 நாட்களே உள்ளதால் மின் இணைப்புடன் உடனே ஆதாரை இணைத்துவிடுங்கள்.