தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் கோடை வெயிலின் தாக்க இன்னும் குறையாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பதினைந்து மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் சுட்டெரித்து வந்த வெயில் வரும் நாட்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.