சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவாலின் பதவிப் பிரமாணம் நேற்று முன்தினம் நடந்தது. தனது பிரமாணத்தின்போது ஸ்வாதி, இன்குலாப் ஜிந்தாபாத் அதாவது புரட்சி ஓங்குக என்ற பகத் சிங்கின் முழக்கத்தை கூறினார். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே படிக்க வேண்டும்.

இதில் எந்த கூடுதல் வாசகங்களும் அனுமதிக்கப்படாது. இது ஒரு புனிதமான தருணம் என்று கண்டித்தார். மேலும் அந்த பிரமாணம் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.