மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் கல்வி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இரு மொழிகளையும் படித்து வருகிறார்கள். இனி சிபிஎஸ்சி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மூன்று மொழிகளை கற்க வேண்டும். அதில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என முன்மொழிகின்றது.12 ஆம் வகுப்பு மாணவர்கள் இனி இரண்டு மொழிகளை கற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.